புலம்பெயர் தமிழர்கள் தமது கலாச்சர பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு தமிழ் பண்டிகைகளையும், கலாச்சார நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இது அவர்களது தாம் வாழும் நாட்டின் பாரம்பரியத்தில் தமிழர்களின் தனித்துவத்தை, எமது கலாச்சாரத்தை உலகம் அறியச் செய்யும் முக்கியமான முயற்சியாக விளங்குகிறது.
இந்தவகையில் இம்முறையும் 2025 தமிழர்களின் மரபுரிமைத் திங்களான தை மாதத்தில் தைப்பொங்கல் நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றத்தினுள உள்ள மண்டபத்தில் நடைபெற இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை தங்களது X.com தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வானது 15 ஜனவரி 2025 அன்று மாலை 06:30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
