இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நாளைய தினம் 2025 புத்தாண்டு கடமைகள் அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கையில் இது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய வருடத்தை முன்னிட்டு, “தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்படுகின்றது. இந்த திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்போகின்றார். புதிய ஆண்டுக்கான அரச பணிகள் மற்றும் திட்டங்கள், இதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் தமது பணியிடங்களில் “தூய்மையான இலங்கை” திட்டத்தின் கீழ் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலி மற்றும் ஒளிப்பரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், அனைத்து அரச ஊழியர்களும் தூய்மையான இலங்கை உறுதிமொழியை நேரலையில் வாசிக்குமாறு அவர்கள் தொடர்புடைய இடங்களில் சீராக பணிகளைத் தொடங்குவதை உறுதி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.