கொழும்பு மேல் நீதிமன்றம் 12/12 ஒரு தீர்ப்பில், 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 31 வயதான நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், குறித்த நபருக்கு 45,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 450,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம், 14 வயது சிறுமி ஆலயம் ஒன்றின் வருடாந்த தேரோட்டத்தை காண சென்ற போது நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர், அவளை மருதானை பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று, பலவந்தமாக தடுத்து வைத்து தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.