“இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
இந்தப் பரபரப்பான கருத்து தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது
“இலங்கையென்பது சிங்கள தேசமாகும். வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருக்கின்றார். அவர் பௌத்த சாசனத்துக்கு எதிராக கூக்குரல் எழுப்புகின்றார். எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது.
பண்டுகாபய மன்னர் முதல் சிங்கள மன்னர்களே இலங்கையை ஆண்டுள்ளனர். எனவே, இது சிங்கள, பௌத்த தேசமாகும். எனினும், பௌத்த தர்மத்துக்கமைய நாம் அனைத்து சமயங்களையும், இனங்களையும் மதிக்கின்றோம்.
அந்தவகையில் எம்முடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது கரங்களை உடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்தால், வாழ்வதற்கு தனியான உலகை தேடிக்கொள்ள நேரிடும். இதற்காகவே மேர்வின் சில்வா போன்றவர்கள் இருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லை. இது ஒரு நாடு. இது சிங்கள தேசமாகும். பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்வரை, புத்த தர்மத்துக்கமைய வாழும்வரை இயற்கை இந்நாட்டை பாதுகாக்கும். இதற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்டால், இயற்கை நிச்சயமாக அதற்கான பதிலைக் கொடுக்கும்.”
இந்த கருத்துக்கள், இலங்கையின் தேசிய அடிப்படைகள் மற்றும் பௌத்த மதம் குறித்த வலியுறுத்தல்களை முன்வைக்கும் அதிரடியாக இருக்கின்றது.