தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதன் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுக்கு (S. Kajendran) அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கட்டளையில், செல்வராசா கஜேந்திரனை இன்று (20.02.2025) பகல் 12 மணிக்கு பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, இராணுவத்தினரின் உதவியுடன் சட்டவிரோதமாக தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றக் கோரி, ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்கான விசாரணை நடைபெறவுள்ளதால், செல்வராசா கஜேந்திரனுக்கு இந்த அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.