தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ தற்போது இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். இவர் முன்னதாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.