Monday, January 26

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரிக் கொள்கையின் அடிப்படையில், இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி இன்று (ஆகஸ்ட் 7) முதல் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுக்கான அறிவிப்பு, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் 2025 ஏப்ரல் 3ஆம் தேதி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச வரி விதிக்க முடிவு செய்ததையடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இலங்கைக்கு 44% வரி விதிக்கப்பட்டிருந்தது. இதன் பொருளாதார தாக்கம் கடுமையானதாக இருக்கும் என்பதை உணர்ந்த இலங்கை அரசாங்கம், அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடுக்க முனைந்தது.

இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக, வரி விகிதம் 20% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, “இந்நிலையில் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 20% வரிவிகிதத்தை மேலும் குறைக்கும் வாய்ப்புகள் குறித்தும், விரைவில் இருநாட்டு அதிகாரிகளுக்கிடையில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏற்றுமதிக்கழகம் மற்றும் பொருளாதார நிபுணர்கள், இந்த வரி மாற்றங்கள் சில முக்கிய ஏற்றுமதி துறைகளில் தாக்கம் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். அதற்கெதிராக புதிய வர்த்தக யுத்தங்களைத் தவிர்க்கும் வகையில் தீர்வுகள் தேடப்பட வேண்டும் என்றுள்ளார்கள்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version