Wednesday, July 16

மட்டக்களப்பு புனித மரியால் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் நேற்று (25.12.2024) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், படுகொலைக்கு நீதி வேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ஒருமுறை எழுப்புவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version