Wednesday, July 16

இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் இன்று (14.12.2024) வவுனியாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த கூட்டம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில், கட்சியின் முக்கியத்துவமான தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூடியோர் பங்கேற்றனர். இதில், செயற்குழு உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கடந்த தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், மற்றும் இலங்கை அரசியல் மற்றும் சமூக நிலவரம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாடப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நேரம் பதவிவிலகியதாக கூறிய மாவை சேனாதிராஜா
தற்போது எவ்வாறு இந்த கூட்டத்தினை தலமை தாங்க முடியும் என மக்கள் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர்.

இவ்வாறான முன்னுக்கு பின்னான அறிக்கைகளும் செயற்பாடுகளும் மக்கள், கட்சியின் மேலுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version