Monday, January 26

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போன இளைஞன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போனவர் — முத்தையன்கட்டில் வசிக்கும், 32 வயது, 7 மாத குழந்தையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் — வெள்ளிக்கிழமை (8) இரவு, “தகரங்கள் கழற்ற வேண்டும்” என்ற பெயரில் முகாமிற்கு வர அழைக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கு சென்ற ஐவரில், ஒருவரின் உடல் குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இன்னொருவர் கடுமையான அடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு, பொதுமக்கள் இராணுவ வாகனத்தை மறித்து, நீதி கோரியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version