தையிட்டி விகாரை தொடர்பாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எமது தீர்மானம் அமையவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். மேலும், இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்குவதற்கு எந்தவித இடமும் அளிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெற்ற அவர், நிகழ்வுக்குப் பிறகு ஊடகவியலாளர்களால் தையிட்டி விகாரை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்பட்ட போது அதற்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள், தற்போது அந்த பிரச்சினையை மீண்டும் மோதலாக்க முயற்சிக்கின்றனர்.
தையிட்டி விகாரை பற்றி உண்மையில் நடவடிக்கை எடுப்பவர்கள் இருக்கிறவரா? இல்லையெனில், விரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்களா?
இந்த விடயம் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டக்கூடியது. ஆனால், மக்கள் இதனை தோற்கடித்துள்ளனர், மேலும் நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றது. எனவே, இது குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லை.
மதவாதத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் இலாபத்தை பெற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடாது. எவ்வாறாயினும், எமது அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகளை முன்னெடுக்கும். மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்திற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
விகாரை கட்டப்படுவதின் சட்டசரிமை குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால், அந்த நிலம் மக்களுடையது என்பதில் யாருக்கும் எதிர்மறை கருத்து இல்லை. அதனால், அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈட்டம் வழங்க வேண்டும்.
விகாரையை உடைத்து நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால், அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, சுமூகமான தீர்வை முன்வைக்க வேண்டும். இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடம் அளிக்கப்படாமல், உறுதியுடன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்” என்றார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்
இது இனவாதத்துக்கோ! மதவாதத்துக்கோ! எந்த ஒரு எந்தவித தொடர்பும் இல்லை. இது தையிட்டி மக்களினுடைய பூர்விக காணிகள் இந்த காணிகள் தான் அவர்கள் தங்களுக்கு வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தொடர்ந்து போராடுகின்றார்கள். இது மக்களுடைய விருப்பமாகவும் இருப்பதை மக்களே கூறி உள்ளனர். இந்த மக்களுடைய போராட்டத்தையும் இனவாதமாகவும் தேர்தலுக்கான பரப்புரை எனவும் திசைதிருப்பதற்கு இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் முனைப்பு செய்கிறார் என மக்கள் விமர்சிக்கின்றனர்.