மாகாணமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுடன் தேசிய மட்டத்திற்கும் தகுதிபெற்று நடேஸ்வரா கல்லூரி பெண்கள் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்கள் மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டி 15, 16 ஆம் திகதிகளில் மு/பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் யா/நடேஸ்வரக்கல்லூரி பெண் அணி வரலாற்றில் முதற்தடவையாக சம்பியனாகி தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

