கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்தில் சிக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தனது 9 மாத குழந்தையை காப்பாற்ற போராடிய தாய் உயிரிழந்தார். குழந்தையும், காயமடைந்த தந்தையும் நான்கு பிள்ளைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரணமடைந்த திருமதி. தனலட்சுமியின் உடல் இன்று (13) மாலை 3 மணிக்கு கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.