Monday, January 26

முல்லைத்தீவு மாவட்டத்தின் தீர்த்தக்கரைப் பகுதியில் வசிக்கும் வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த ஜூன் 19ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபின் காணாமல் போயுள்ளார்.

இவர் கடலுக்குச் சென்ற படகில் இரத்தக்கறைகள், சிறிய சேதங்களின் அடையாளங்கள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரத்தில் பழுதுகள் இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் காணப்பட்ட இரத்தக்கறை மனித இரத்தம் என்பதும் தடையவியல் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் அவரை திட்டமிட்டு தாக்கி காணாமல் ஆக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

இது தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன் கவலை வெளியிட்டு, முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்கள் பெரிதும் விரிவடைந்து வருகின்றன என்றும், அதனால் உயிர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளார்:

“**முல்லைத்தீவின் கடற்பரப்பு தற்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வெளிச்சம்பாச்சி போன்ற தொழில்கள் மேற்கொள்ளப்படுவதால், கடல் பகுதி முழுக்க பகல்போல் வெளிச்சமடைந்துள்ளது.

இதனைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள கடற்படையினர், பொலிசார், மற்றும் நீரியல்வளத் திணைக்களம் போன்ற அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்,” எனவும் கூறியுள்ளார்.**

இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத கடற்றொழில் குழுக்களை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் முற்றிலும் தவறிவிட்டதாகவும், அடிப்படை பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version