கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட கடும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை சார்பில் இடர்கால உதவி இன்று வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் பனிக்க நீராவி கிராமத்தில் மிகவும் நலிவடைந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 பெறுமதியில் உலர் உணவுக் கிட்கள் வழங்கப்பட்டன. மொத்த ரூ.104,000 செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த உதவி, நாளாந்த வேலைகளில் ஈடுபட முடியாமல் வீடுகளில் முடங்கி இருக்கும் குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தி வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்டத்திற்கான நிதி, ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரைச் சேர்ந்த திரு. சந்திரராஜா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளால் வழங்கப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை நன்றியைத் தெரிவித்ததுடன், திரு. சந்திரராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
இன்றைய உதவி விநியோகத்தில் திரு. திருமதி. சசிக்குமார் – சங்கீதா ஆகியோர் நேரடியாக பங்கேற்று வழங்கியதற்கு அறக்கட்டளை நன்றியைத் தெரிவித்துள்ளது.
