Wednesday, July 16

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் 40,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக திரண்ட இடங்களில், சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக 500 இற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு பணியில் புலனாய்வு அதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர். அவர்களின் பணிகளை மேற்பார்வையிட 48 மூத்த அதிகாரிகள் மற்றும் 769 ஆய்வு தர அதிகாரிகளும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், மேல் மாகாணத்தில் மட்டும் 6,500 இற்கும் மேற்பட்ட பொலிஸாரை பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள், பண்டிகை காலம் மற்றும் பொதுமக்களின் சந்தர்ப்பங்களை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுக்க நெறிமுறைகள் உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version