Friday, July 18

வவுனியாவில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் உள்ள 3529.25 ஏக்கர் நெற்செய்கைகள் விவசாயிகளால் அழிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அழிவுகளுக்கான மதிப்பீட்டு பணிகள் கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள காப்புறுதிச் சபையின் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மதிப்பீட்டின் அடிப்படையில் 1387.5 ஏக்கர் நெற் காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒவ்வொரு ஏக்கருக்கும் 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version