நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (07) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை.
அபாய நிலைகள்: மாவட்ட வாரியாக
🔴 சிவப்பு (Red) – அதிகபட்ச அபாய எச்சரிக்கை
- கண்டி
- கேகாலை
- குருநாகல்
- மாத்தளை
- நுவரெலியா
🟠 செம்மஞ்சள் (Orange) – நடுத்தர முதல் உயர்ந்த அபாயம்
- பதுளை
- இரத்தினபுரி
🟡 மஞ்சள் (Yellow) – ஆரம்ப எச்சரிக்கை நிலை
- கொழும்பு
- காலி
- கம்பஹா
- களுத்துறை
- மாத்தறை
- மொனராகலை
மல்வத்து ஓயா நீர்மட்டம் உயர்வு
இதேவேளை, மல்வத்து ஓயா ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனால், ஆற்றை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
