இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு, 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் (Locomotive) டீசல் என்ஜின்கள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு சிறிதளவு பயன்படுத்தப்பட்ட 20 எம்10 என்ஜின் இயந்திரங்களும், பராமரிப்புக்கான உதிரி பாகங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், இரு புதிய இயந்திரங்கள் கூட இலங்கை அரசு தரப்புக்கு வழங்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து, இந்தியாவின் பொறியியல் ஆலோசனை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான RITES நிறுவனத்தினால், ஐந்தாண்டு கால பராமரிப்பு சேவைகள் வழங்குவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் சமர்ப்பிப்பின் அடிப்படையில், இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த ஒப்பந்தத்தின் செயல்படுத்தல் நடைமுறைபடுத்தப்பட்டு, 22 லோகோமோட்டிவ் இயந்திரங்கள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, இலங்கை தொடருந்து துறையின் பெரும்பான்மையான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த உதவும் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.